மானாட கொடி
படம்: முதல் வசந்தம்
இசை: இசைஞானி
வெளியான வருடம்: 1986
ராகம்: சுத்த சாவேரி
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
காற்சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ....தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை
ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ....
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
வானமென்னும் மேடையிலே வான வில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்லவோ
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
No comments:
Post a Comment