Showing posts with label பொன்னெழில் பூத்தது. Show all posts
Showing posts with label பொன்னெழில் பூத்தது. Show all posts

Wednesday, November 22, 2017

பொன்னெழில் பூத்தது

பொன்னெழில் பூத்தது

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்....
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் !..
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன் !!....

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில் !...
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல் !!...

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே....
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே ?...
கிண்ணம் நிரம்பிடச் செங்கனிச் சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே ?...

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு....
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு !...
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு !!...

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ...
என்னிடம் கோபம் கொள்ளுவதோ ?...
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ !!!....

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...