Showing posts with label சின்ன புறா ஒன்று. Show all posts
Showing posts with label சின்ன புறா ஒன்று. Show all posts

Friday, November 3, 2017

சின்ன புறா ஒன்று

சின்ன புறா ஒன்று

சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே (சின்ன)

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க

கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
இன்று நாதங்கள் கேட்டாயோ ஓ........ஓ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா ஆ.......ஆ......ஆ..........ஆ (சின்ன)

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் உன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை

நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா? அல்லது சோகங்களா?
சொல்லம்மா ஆ.......ஆ.....ஆ...........ஆ (சின்ன)