Showing posts with label கண்ணன் முகத்தோற்றம். Show all posts
Showing posts with label கண்ணன் முகத்தோற்றம். Show all posts

Tuesday, October 3, 2017

கண்ணன் முகத்தோற்றம்

கண்ணன் முகத்தோற்றம்

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்....
என்ன நினைந்தேனோ...
தன்னை மறந்தேனோ !....
கண்ணீர் பெருகியதே....ஓ...
கண்ணீர் பெருகியதே !!...

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...
கண்ணன் நடுவினிலே....
காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...
எதிலும் அவன் குரலே !!...

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்...
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை...
கண்ணீர் பெருகியதே...ஓ...
கண்ணீர் பெருகியதே !!....

அன்று வந்த கண்ணன்
இன்று வரவில்லை....
என்றோ அவன் வருவான்...ஓ...
என்றோ அவன் வருவான் !!...

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை....
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ !...
நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன் !!....
கண்ணா...கண்ணா...
கண்ணா !!!....