Showing posts with label ஒரு வானவில். Show all posts
Showing posts with label ஒரு வானவில். Show all posts

Sunday, October 29, 2017

ஒரு வானவில்

ஒரு வானவில்

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்...
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய் !!....

வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா...
மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே...
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே ?...
கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா !!...

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்...
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய் !!....

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை...
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது...
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது !...
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் !!!...
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்...
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய் !!....