Showing posts with label ஒரு நாளும் உனை. Show all posts
Showing posts with label ஒரு நாளும் உனை. Show all posts

Thursday, October 5, 2017

ஒரு நாளும் உனை

ஒரு நாளும் உனை

படம்: எஜமான்
பாடல்: R.V. உதயகுமார்
இசை: இளையராஜா
குரல்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஒரு நாளும் உனை மறவாத

கட்டிலிடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே
துணையான இளமானே