Showing posts with label என்னை யாரென்று. Show all posts
Showing posts with label என்னை யாரென்று. Show all posts

Saturday, October 21, 2017

என்னை யாரென்று

என்னை யாரென்று

திரைப்படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடல் : என்னை யாரென்று எண்ணி

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..!