Showing posts with label ஆனந்தத்தேன் சிந்தும். Show all posts
Showing posts with label ஆனந்தத்தேன் சிந்தும். Show all posts

Friday, October 13, 2017

ஆனந்தத்தேன் சிந்தும்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்

திரைப்படம்: மண் வாசனை
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் தேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா
ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா

நீ நடந்து போகையிலே பூ நடந்து போகக்கண்டேன்
நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வழிந்து ஓடக்கண்டேன்
முத்தோ மணியோ எல்லாம் கவிதை
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது
சொல்லித்தந்ததுந்தன் பார்வை அள்ளித்தந்ததுந்தன் ஜாடை
அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து
பொன்னே பூவே எல்லாம் குறும்பு
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது
அச்சம் தந்ததுந்தன் வேகம் வெட்கம் தந்ததுந்தன் மோகம்
அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா