Sunday, November 19, 2017

கூட்டத்திலே கோவில்புறா

கூட்டத்திலே கோவில்புறா

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

அ அ ஆ ஆ ஆ அ அ ஆ ஆ ஆ
லல்லலலா லல்லலலா பாஸநித நிதபா

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது

பூங்குயிலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.........

பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவையுன்னை எண்ணிக் கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுவது என் மனமே

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம் தஜம் தஜம் தஜம் தஜம்

அ அ அ அ அ அ அ அ நிகத ஸரிக ஸகரிகப தா ஸா நீ த

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜா வனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே

கன்னிப் பெண்ணே நீயும் இல்லையென்றால் கான மழை வருமோ
தாமரைப் பூங் காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக் கொண்டேன் பொன் மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போலிந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா...!

No comments:

Post a Comment