Thursday, October 19, 2017

கூண்டுக்குள்ள என்ன

கூண்டுக்குள்ள  என்ன

ஆ: கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே
அடி  மானே  மானே  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

(கூண்டு )

பெ: கண்ணு  வளத்து  கண்ணு  தான  துடிசுதுன்னா
எதோ  நடக்குமின்னு  பேச்சு

ஆ: மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு
வீணா  கதை  முடிஞ்சு  போச்சு

பெ: ஈசான  மூலையில  லேசான  பள்ளி  சத்தம்
மாமன்  பேரை  சொல்லி  பேசுது

ஆ: ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு
ஊரும்  சேந்து  என்னை  ஏசுது

பெ: மாமா  மாமா  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

பெ: கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே

ஆ: தென்னன்கிளையும்  தென்றல்  காத்தும்  குயிலும்
அடி  மானே  உன்னை  தினம்  பாடும்

பெ: கஞ்சி  மடிப்பும்  கரை  வேட்டி  துணியும்
இந்த  மாமன்  கதையை  தினம்  பேசும்

ஆ: பொள்ளாச்சி  சந்தையிலே  கொண்டந்த  சேலையிலே
சாயம்  இன்னும்  விட்டு  போகல

பெ: பன்னாரி  கோயிலுக்கு  முந்தானை  ஓரத்திலே
நேர்ந்து  முடிச்ச  கடன்  தீரல

ஆ: மானே  மனே  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

(கூண்டு )

No comments:

Post a Comment