வசந்தத்தில் ஓர் நாள்
படம் :மூன்று தெய்வங்கள் (1971)
பாடியவர் .சுசீலா
இசையமைப்பாளர் : எம் எஸ். விஸ்வநாதன்
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
மையிட்ட கண்ணோடு மான் விளையாட X 2
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை X 2
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் X 2
காவலில் நின்றிருந்தாளோ தேவி
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி
தேவி வைதேகி காத்திருந்தாளோ X 2
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
No comments:
Post a Comment