முல்லை மலர் மேலே
படம் : உத்தமபுத்திரன் (1958)
இசை : ராமநாதன்
பாடகர்கள் : டி.எம்.செளந்தராஜன், பி.சுசீலா
பெ : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
ஆ : வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
பெ : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
பெ : வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆ : மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆ .........ஆ.......ஆ....
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
பெ : விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆ : சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே பெ : ஆ............ஆ .......ஆ....
ஆ/பெ : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
No comments:
Post a Comment