காதலில்லை என்று
காதலில்லை என்று சொன்னால்
பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை....
வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள் !....
வாலிப நெஞ்சங்கள்
கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்
விட்டுத் தள்ளுங்கள் !!..
வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு ?.... சேர்ந்திருக்கத்தானே தெரிந்து கொள்ளு மானே....
பூவில் வண்டு
வந்து வந்து போவது எதுக்கு ?... தேனெடுக்கத்தானே சேர்ந்திருக்கத்தானே !...
ஒரு முறை ஜனனம்
ஒரு முறை மரணம்
தொடங்கட்டும் பயணம் தொடரட்டும் தாகம்...
இது நல்ல உருவம்
பயிர் செய்யும் பருவம்
இனி என்ன தடை வருமா !....
வாலிப நெஞ்சங்கள்
கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்
விட்டுத் தள்ளுங்கள் !....
காதலில்லை என்று சொன்னால்
பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை....
வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள் !....
வாலிப நெஞ்சங்கள்
கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்
விட்டுத் தள்ளுங்கள் !!..
கண்களில்லை என்று சொன்னால்
காவியம் இங்கில்லை பெண்களில்லையென்றால்
ஆண்களிங்கு இல்லை...
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை ஆண்களில்லையென்றால்
பெண்களிங்கு இல்லை !....
சமத்துவம் பெருக
ஜாதிகள் ஒழிக
இளைஞர்கள் எழுக
பழையது அழிக....
புது யுகம் வருக
பூ மழை பொழிக
தலைமுறை வளரட்டுமே !!!....
No comments:
Post a Comment