அணிந்துரை
இந்தியச் சிந்தனையை வளமும், வனப்பும் பெறச் செய்த மூதறிஞர் குழுக்கள் பல. அக்குழுக்களுள் சில, பொன்றாப்புகழ் வாய்த்த சமயங்களாக வளர்ச்சியுறும் வாய்ப்பைப்பெற்றன. இதனால், அவை காலப்போக்கில் மக்கள் இடையே பெருவாழ்வு பெற்றன. வேறுசில குழுக்களின் எண்ணங்களும், நெறிமுறைகளும் மக்களுடைய ஆதரவைப் பெற இயலாமல் போய்விட்டன. இதன் விளைவாக, அக்குழுக்களைச் சேர்ந்தோர், நாளடைவில் தம் கொள்கைகளோடு நெருக்கமான தொடர்பும், நாட்டு மக்கள் இடையே செல்வாக்கும் பெற்று விளங்கிய கொள்கைக் குழுவினரோடு இரண்டறக் கலந்துவிட்டனர்.
இத்தகைய 'அவலநிலையை' அடைந்த சிந்தனைக் குழுக்களுள் ஒன்றே , 'ஆசீவகரின் அமைப்பாகும்
உலக வரலாற்றில், கி.மு ஆறாம் நூற்றாண்டு தத்துவ எழுச்சிக் காலமாக விளங்குகிறது
அக்காலகட்டத்திலேயே, நம்முடைய நாட்டில் ஆசீவகமும் சமணமும், பௌத்தம் அரும்பின
மக்கலி கோசலர் எனும் ஞானியின் எண்ணப் போக்கைத் தழுவி ஒழுகியவர்களே ஆசீவகர் என்று சுட்டப்பட்டனர். இக்குழுவினரை பற்றி. குறிப்புகள் பண்டைக்காலத் தமிழகத்தின் தமிழிக் கல்வெட்டுக்களில் முதன்முதலாகக் காணப்படுகின்றன தேவார காலத்தில், “கேரையர் எனும் பெயரால் சுட்டப்பட்டவர்கள், ஆசீவகர்களாக இருக்கலாம் என்பது பல்கலைச் செல்வர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரின் கருத்தாகும். சமணர்களுள் ஒரு பிரிவினராக ஆசீவகர்ளைக் கருதும் நிலைமை கிறித்துவநூற்றாண்டின் தொடக்கத்திலேயே உண்டாகிவிட்டது. இதனால், இவர்களுடைய வாழ்வும், சிந்தனையின் நோக்கும் போக்கும் இருட்படலங்களால் மறைக்கப்பட்டுவிட்டன
இந்தச் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகள், நம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அருகியே காணப்படுகின்றன
VI
பிராகிருத மொழிகளிலும் தமிழிலும் காணப்டும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், வடமொழி நூல்களின் குறிப்புகளைத் தேவையான இடங்களில் துணைணயாகக் கொண்டும், "தமிழகத்தில் ஆசீவகர்கள் எனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது நாலினுள் நான்கு இயல்கள் உள்ளன. அவை இந்
(1) முன்னுரை,
( தமிழ் நூல்களில் ஆசீவகக் கோட்பாடுகள் தமிழ் இலக்கியத்தில் வாழ்,
(1) தமிழகத்தில் ஆசிவகர்கள் பற்றி இலக்கியம் தவிர்ந்த ஏனைய செய்திகள் என்பனவாகும். இவற்றோடு பின் இணைப்பு, “ஆசீவக நெறியினை விளக்கும் தமிழ் நூற்பகுதிகள்' எனும் குறிப்புகளும் சேர்க்ப்பட்டுள்ளன
இன்றுவரை, ஆசீவகர்களை பற்றிய நூல் யாதும் தமிழில் வெளிவரவில்லை . தமிழில் வெளிவரும் முதல் நூலாக இதனைச் கட்டலாம். இந்நூல் சிறு வடிவிலான ஓர் ஆராய்ச்சி நூலாகும்
இந்நூலின் மூன்றாவது இயலான 'தமிழ் இலக்கியத்தில் 212 ழ் எனுர் பகுதி, தமிழ் அறிஞர்களுடைய கருத்தைக் கவருவதாகும்.
பண்டைத்தமிழ்ச் சான்றோர்களும் இக்கால மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களும் வைதீக சமயத்தினர் கூறும் வினைக்கொள் கைகளையும் தலைவிதி பற்றிய நம்பிக்கைகளையும் பின்னணியாகக் கொண்டு 'ஊழினை விளக்குவது இல்லை! யாதோ ஒரு முறைப் படி மக்கள் வாழ்க்கையை இயக்குவது தான் ஊழ் என்பது தமிழறிஞரின் துணிவாகும். இந்த எண்ணப்போக்கிற்குரிய 'கரு முதலை' இந்த நூலின் மூன்றாவது யெயில் காணுகின்றோம் ஆசீவகர்களுடைய சிந்தனைத் தாக்கமே, பண்டைத் இடையே இத்தகைய எண்ணப்போக்கை எழுச்சியுறச்செய்து
தமிழர் இருக்கிறது என்பதனை இந்த நூலாசிரியர், நன்கு விரித்துரைத் துள்ளார் (பக். 42-60). இவ்வகையில், இந்நூல் தமிழருடைய சிந்தனைக்கு ஊற்றம் அளிப்பதாக அமைகிறது
இந்த நூலை உருவாக்கியவர் டாக்டர். திருமதி. ர. விஜயலட்சுமி என்பவராவர். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஆராய்ச்சிப் பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார். மறைந்த மொழியியல் மாமேதை டாக்டர். டி. பர்ரோ அவர்களிடம் ஆராய்ச்சி மாணவி
vii
யாகப் பயின்றவர் இவர். டாக்டர். விஜயலட்சுமி அவர்கள் பிராகிருத மொழியில் வல்லுநர். தமிழின் சிறப்பை உலகிற்குப் புலப்படுத்தும் நூல்களை வருங்காலத்தில் இவர்களிடமிருந்து தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறது
இந்நூல் தமிழிற்கு ஒரு புதிய வரவு! இதனால், தமிழ் மொழி வளம் பெறும் என நம்புகின்றேன்
சென்னை ,
ஆனி. 20 ; தி. ஆ. 2019
4-7-1988
க. த. திருநாவுக்கரசு
No comments:
Post a Comment