Showing posts with label benifits. Show all posts
Showing posts with label benifits. Show all posts

Monday, January 29, 2018

துளசிச் செடி

துளசிச் செடி

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் #மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள் தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

#அரசமரம், #மூங்கில், #துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அத்துடன் அதிக ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய #தொட்டியும், வீட்டின் #ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் .
துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

இது #மதம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பூமியில் #கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பி.பி.எம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பி.பி.எம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் (அல்லது) 720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது) 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.