Showing posts with label கோமேதகம். Show all posts
Showing posts with label கோமேதகம். Show all posts

Thursday, June 17, 2021

கோமேதகம்-சங்க இலக்கியத்தில் மணிகள் P.L.Samy IAS

 கோமேதகம்

திருமணி

சங்க இலக்கியத்தில் மணிகளைப்பற்றிய பல செய்திகளைக் காணலாம். முன்னோர் முத்தையும் மணிகளில் ஒன்றாகக் கொண்டனர். இலக்கியத்தில் மணிகள் என்று சிறப்பாக அழைக்கப்படுபவை மாணிக்கம், நீலம், புட்பராகம், வைடூரியம், கோமேதகம் ஆகிய ஐந்து மணிகளாகும்.

"ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்

இலங்குகதிர் விடூஉ நலங்கெழு மணிகளும் '"

- சிலம்பு : ஊர்காண் காதை: 191-192

இந்தக் கற்களையே சங்க நூல்களில் 'இலங்குகதிர்த் திருமணி' என்று அழைத்தனர்.

"இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்

அகன்கண் வைப்பின் நாடு "

-பதிற்றுப் பத்து 6 : 8, 19 -20

சங்க நூல்களில் இந்த ஐந்து இரத்தினக் கற்களையே ‘திருமணி' என்று அழைத்தனர். மணி என்ற பெயர் பெரும்பாலும் மாணிக்கத்திற்கும் நீலத்திற்கும் பெயராக வழங்கியது.

10

தமிழ் நாட்டில் கிடைத்த கற்களில் சிறந்தவை வைடூரியமும் நீலமும் ஆகும்.

ஏற்றுமதி

தமிழ் நாட்டில் விளைந்த மணிக்கற்களைத் தவிரத் தமிழ். நாட்டுத் துறைமுகங்களுக்குப் பலவகை மணிக்கற்கள் கெ

வரப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானதைப் பிறநாட்டார் எழுதியுள்ளனர். தொண்டி, முசிறி துறைமுகங்களிலிருந்து பலவகை மணிகள் ஏற்றுமதி செ பட்டதாகப் 'பெரிபுளூஸ்' என்ற நூல் கூறியுள்ளது. இந்த மணிகளில் பல தமிழ் நாட்டில் கிடைக்கா தவையாகும் இவை பெரும்பாலும் ஈழ நாட்டிலிருந்து கொணரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகக் கருதலாம்.

மணிபல்லவம்

ஈழ நாட்டில்தான் சிறந்த மணிகள் நிறையக் கிடைத்தன. மணிகள் கிடைத்த தீவையே மணிமேகலை ‘மணிபல்லவம்” என்று அழைத்துள்ளது.

தமிழ் நாட்டில், கொங்கு மண்டலத்திலேதான் நிறைய மணிகள் கிடைத்தன என்று ஆராய்ச்சியாளர் கண்டுபிடித் துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் பாடியூர் என்ற ஊரில் உயர்ந்த மணிக்கற்கள் கிடைத்ததை உரோமர் கி. பி. முதல் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளனர். இங்கு ஒருவகைக் கோமேதகக் கல் (Beryl) கிடைத்தது என்று தெரிகின்றது.

ஆந்திரத்தில் பட்டிப்புரோலு தூபியில் (Bhattiprolu Stupa)

கோமேதக அணிகள் அகப்பட்டுள்ளன.

பிளினி என்ற மேல்நாட்டு ஆசிரியர் கோமேதகம் இந்தியாவில் கிடைப்பதாக எழுதியுள்ளார்.

யுன்னாடு

இந்தக் கற்கள் கிடைத்த புன்னாடு என்ற ஊரைச் சங்க காலத்தில் நன்னன் வென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

மைசூருக்கு அருகே உள்ள இந்த நாட்டிலும் ஒருவகைக்

கோமேதகம் கிடைத்துள்ளது. இங்குக் கிடைத்த கோமேதகம்

நீல நிறமுடையதாக இருந்தது.

இந்த நீலக் கற்களை (Acquamarine) சுரங்கத்தில் இருந்து எடுத்ததாகப் பிளினி கூறியுள்ளார்.