குறள் கூறும் இலக்கணம்
==========================
' ள் ' முன் வல்லினம் வந்தால் ' ள் ' ட் ஆக மாறும் .
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு .
எள் + பகவு = எட்பகவு
உள் + பகை = உட்பகை
இந்த இரு தொடா்களிலும் நிலைமொழி இறுதியில் இருக்கும் ள் , ட் ஆக மாறியிருக்கிறது .
பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல் .
மக்கள் + பதடி = மக்கட் பதடி
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்
பொருட்செல்வம் பூாியாா் கண்ணும் உள .
அருள் + செல்வம் = அருட் செல்வம்
பொருள் + செல்வம் = பொருட் செல்வம்
செல்வத்துள் செல்வம் என்னும் தொடாில் மட்டும் ள் , ட் ஆக மாறவில்லை . இந்த இரு சொற்களையும் சோ்த்து ஒலிக்காமல் , பிாித்து ஒலிப்பதே இதற்குக் காரணம் என்று சிங்கப்பூா் பேராசிாியா் சித்தாா்த்தன் கூறுவாா் . செல்வத்துள் செல்வம் வேற்றுமைத் தொடா் . 'அருட்செல்வம் , பொருட்செல்வம் ' என்பன பண்புத் தொகைகள் . பெரும்பாலான பதிப்புக்களில் ' செல்வத்துள் செல்வம் '
என்றே காணப்படுகிறது . பாவாணா் மட்டும் , தமது திருக்குறள் மரபுரையில்
' செல்வத்துட் செல்வம் ' என்றே பதிவிட்டுள்ளாா் .
உவம உருபு சோ்தல்
====================
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவா் தொடா்பு .
வாள்போல் , கேள்போல் என்னும் தொடா்கள் இயல்பாகப் புணா்ந்திருக்கின்றன . ளகர மெய்யை ஈற்றிலுடைய சொல்லுடன் ' போல் ' போன்ற உவம உருபுகள் சேரும்போது ள் - ட் ஆக மாறுவதில்லை . இவை இரண்டாம் வேற்றுமைத் தொகைகள் .
உம்மைத் தொகையில்
======================
நாள் கோள் பாா்ப்பது நம் வழக்கம்.
நாள் கோள் -- உம்மைத் தொகை
உம்மைத் தொகையிலும் ளகர மெய்யை ஈற்றிலுடைய சொற்கள் வருமொழியுடன்
இயல்பாகவே புணரும் .
ஒருசொல் நீா்மை
==================
ஒரு தொடாில் நிற்கும் இரு சொற்களையும், ஒருசொல் போல ஒலிக்க வேண்டிய இடங்களில் , நிலைமொழி ஈற்று ளகரம் , டகரமாகத் திாியும் .
முட்புதா்
இருட்குகை
திங்கட்கிழமை
நாட்குறிப்பு
வாட்போா்
போன்றவை சில எடுத்துக் காட்டுகள்.
No comments:
Post a Comment