Monday, November 15, 2021

பழமொழிப் புதையல் ப.குணசேகர்

தனக்குத்தானே நன்மை செய்யாதவன் 
அடுத்தவனுக்கு நல்லதாக 
இருப்பான் என்று சொல்ல முடியாது

அடுத்தவர் மீது எலும்பை வீசுபவன்
தன்மீது எலும்பு வீசப்பட்டால் 
கவலை கொள்ளக்கூடாது

செத்தால் உன்உடலைப் புழுக்கள்
தின்னும் கவலை உன்னைத்
தின்னும் வாழும்போது

எந்தக் காரணமும் இன்றி சீற்றம்
கொள்பவன் எந்தக் காரணமும்
இல்லாமல் நட்பாக இருப்பான்

தன்னுடைய குடும்பம் குறித்து
அவமானம் அடைபவன் எப்போதும்
அதிர்ஷ்டக்கட்டையாகவே இருப்பான்

வார்த்தைகளை எடைபோட 
வேண்டும் எண்ணிப் பார்க்கக் 
கூடாது

எல்லாரையும் திருப்தி செய்பவன்
காலம் வருமுன்பே இறந்து 
போவான்

ஏழில் இருந்தது போலவே 
எழுபதிலும் இருப்பான்

எப்படிப் படுக்கையை
அமைக்கிறாயோ அப்படியே
அதன்மீது தூங்குவாய்

உடலுக்கு சோப்புப்போல
உள்ளத்திற்குக் கண்ணீர் 
தோன்றும்

No comments:

Post a Comment